மாண்டியா தொகுதியிலிருந்து மூன்றுமுறை நாடாளுமன்றத்துக்கு காங்கிரஸ் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட மறைந்த நடிகர் அம்பரீஷின் மனைவியும், நடிகையுமான சுமலதாவை அத்தொகுதி மக்கள் அரசியலுக்கு வரும்படியும், தேர்தலில் போட்டியிடும்படியும் வற்புறுத்துகிறார்கள். இதுகுறித்து சுமலதா கூறியதாவது, "எனக்கு அரசியலில் அனுபவமில்லை. அரசியலில் சேர்ந்தாலும் என் கணவரைப் போல மக்களிடம் புகழையோ, செல்வாக்கையோ என்னால் பெறமுடியுமா என்பது சந்தேகம்தான். அரசியல் ஆர்வமும் இல்லை. இருந்தாலும் அவரது தொகுதி மக்களுக்காக தேவையான உதவி செய்ய விரும்புகிறேன்'' என்றார்.