"படைவீரன்' படத்தில் கிராமத்துப் பெண்ணாக நடித்த அம்ரிதா ஐயருக்கு மீண்டும் கிராமத்துப் பெண்ணாக கன்னடத்தில் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் பேரன் வினய் ராஜ்குமாருடன் நடிக்கும் வாய்ப்பு "இராமயணா' என்ற படத்தில் கிடைத்துள்ளது. இதன் படப்பிடிப்பு ராஜ்குமார் பிறந்த ஊரான கஜனூரில் நடப்பது விசேஷமாகும். அம்ரிதா ஐயர் தமிழ் பெண்ணாக இருந்தாலும், முதல் நாள் படப்பிடிப்பின்போது படத்தின் இயக்குநர் தேவனூர் சந்துருவிடமும், வினய் ராஜ்குமாரின் தந்தை ராகவேந்திராவிடமும் கன்னடத்தில் பேசி அசத்தியுள்ளார்.