இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கரிஷ்மா கலியாண்டா, ஆஸ்திரேலிய நாட்டில் எம்எல்ஏவாக வெற்றி பெற்றுள்ளார்.
கர்நாடக மாநிலத்துக்கு உள்பட்ட குடகு மாவட்டம் நாபொக்லுவை பூர்விகமாகக் கொண்டவர் கரிஷ்மா கலியாண்டா. முப்பத்து ஐந்து வயதான இவர், ஆஸ்திரேலிய தொழிலாளர் கட்சியில் உறுப்பினராக இருக்கிறார். லிவர்பூல் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராகப் போட்டியிட்டு, அவர் வெற்றி பெற்றார்.
பதவியேற்றபோது, குடகின் கொடவா பெண்கள் அணியும் பாரம்பரிய உடை அணிந்திருந்தார்.