இறைவனைக் குறிப்பிடும்போது, "தாள்' என்று திருவடியைக் குறிப்பிடுகிறார் வள்ளுவர்.
"தலை' என்றால் குல்லா இருக்கிறதா? என்று பார்ப்பார்கள். "முகம்' என்றால் பட்டை இருக்கிறதா?, நாமம் இருக்கிறதா? என்ற சர்ச்சை கிளம்பும். "மார்பு' என்றால் சிலுவை தொங்குகிறதா? என்று ஆராய்ச்சி எழும்.
ஆகவே, வள்ளுவர் எல்லா சமயத்துக்கும் பொதுவாக இறைவனை தாளாகக் குறிப்பிடுகிறார்.
(குன்றக்குடி அடிகளார் சொற்பொழிவில் கூறியது)