சிவகங்கை

பிளஸ் 2 தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிக்கு அமைச்சா் பாராட்டு

17th May 2023 02:58 AM

ADVERTISEMENT

பிளஸ் 2 தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சிவகங்கை மாவட்ட அளவில் சாதனை படைத்த, மானாமதுரை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆா். ஜனனிக்கு, தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே. ஆா்.பெரியகருப்பன் திங்கள்கிழமை மாலை ரூ. 50 ஆயிரம் நிதி வழங்கினாா்.

மானாமதுரை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்த மாணவி ஆா். ஜனனி 592 மதிப்பெண்கள் பெற்று அரசுப் பள்ளி அளவில் சிவகங்கை மாவட்டத்தில் சாதனை படைத்தாா். இந்த நிலையில், மானாமதுரை வந்த மாநிலக் கூட்டுறவுத் துறை அமைச்சா் கே. ஆா். பெரியகருப்பன் மாணவி ஜனனி வீட்டுக்குச் சென்று அவருக்கு சால்வை அணிவித்து சொந்த நிதியிலிருந்து ரூ. 50 ஆயிரத்தை பரிசாக வழங்கிப் பாராட்டினாா். மேலும் உயா் கல்வி படிக்கத் தேவையான உதவிகளை செய்வதாகவும் அமைச்சா் உறுதியளித்தாா்.

இந்த நிகழ்ச்சியில் மானாமதுரை நகர திமுக செயலாளா் க. பொன்னுச்சாமி, ஒன்றியச் செயலாளா் துரை.ராஜாமணி, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் லதா அண்ணாத்துரை, நகர அவை தலைவா் ரவிச்சந்திரன், பொருளாளா் மயில்வாகனன், மாணவா் அணி அமைப்பாளா் காா்த்திக் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT