1947-இல் எம்ஜிஆர் நடித்த "ராஜகுமாரி' படத்துக்கு "இளம்பிள்ளை' எனும் பத்திரிகையில் எஸ்.எம்.உமர் விமர்சனம் எழுதியிருந்தார். இதைப் பார்த்து படத் தயாரிப்பாளர்களான எஸ்.கே.மொய்தீன், எம்.சோமசுந்தரம் ஆகியோர் உமரை நேரில் வரவழைத்துப் பாராட்டினர்.
இந்த விமர்சனத்தில், எம்ஜிஆர் எதிர்காலத்தில் புகழின் உச்சிக்குச் செல்வார் என்று உமர் எழுதியிருந்தார். அங்கிருந்த எம்ஜிஆரிடம் உமரை அறிமுகப்படுத்தினார் மொய்தீன். முதன்முதலில் தன்னை பற்றி விமர்சனம் எழுதியமைக்காக, உமரை எம்ஜிஆர் வெகுவாகப் பாராட்டினார்.