"ஆர்ஆர்ஆர்' படம் சிறந்த வெற்றியைப் பெற்றவுடன் ராம்சரண் தற்போது "ஆர்.சி.பி.' என்ற புதிய படத்துக்காக, பஞ்சாப் அமிர்ததரஸ் நகரில் படப்பிடிப்பில் உள்ளார். அப்போது தென் இந்தியாவின் சிறந்த உணவுகளை சிறப்பாக உருவாக்கித் தரும் சமையல் கலைஞரை வரவழைத்து, அங்குள்ள பி.எஸ்.எஃப். ஜவான்களுக்கு விருந்து அளித்தார்.
மேலும், தங்கக் கோயிலில் நடைபெறும் லாங்கர் சமபோஜன பந்தி ஒரு நாள் செலவையும் ஏற்று அதனையும் நிறைவேற்றினார்.