மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த தம்பதியர் தங்கள் ஆண்குழந்தைக்கு பெயர் சூட்ட ரவீந்திர நாத் தாகூர் வீட்டுக்கு குழந்தையை எடுத்து சென்றனர். தாகூரிடம் "பொருத்தமான பெயர் சூட்டும் படி வேண்டிக்கொண்டனர்'. அந்தக் குழந்தையை தாகூர் தன் மடியில் வைத்துக் கொண்டு அமர்த்தியா சென் என்று மகிழ்ச்சியுடன் பெயர் சூட்டினார். குழந்தை வளர்ந்து உயர்கல்வி பெற்று பிற்காலத்தில் உலகப் புகழ் பெறுவான் என்று ஆசீர்வாதம் செய்தார்.
குழந்தையின் பெற்றோர் தாகூருக்கு நன்றி தெரிவித்தனர். அந்தக் குழந்தை வளர்ந்து உயர் கல்வி பெற்று கி.பி. 1998-ஆம் ஆண்டில் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்றது. ரவீந்திரநாத் தாகூரின் ஆசீர்வாதம் பலித்தது. நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்னை உலகம் வாழ்த்தியது.