கவிஞர் வாலியை சந்தித்த நண்பர் ஒருவர், "வாலி என்று ஏன் பெயர் வைத்திருக்கிறாய்?' என்று கேட்டார்.
அதற்கு வாலி, "ராமாயணத்திலே, வாலி யாரோடு சேர்கிறானோ, அவருடைய பலத்தில் பாதி, அவனுக்கு வந்து விடுமாம். அதுபோல அறிஞர்களுடன் பழகும்போது, அவர்களது அறிவில் பாதி எனக்கு வந்து விடுமல்லவா? அதனால் தான் நான் அந்தப் பெயரை தேர்ந்தெடுத்தேன்' என்றார்.
உடனே நண்பர் கிண்டலாக, "அப்படியும் உனக்கு அறிவு வந்ததாகத் தெரியவில்லையே?'
வாலி சிரித்துக் கொண்டே, "நான் இன்னும் எந்த அறிவாளியையும் சந்திக்கவில்லையே!' என்றார்.