ஒரு முறை பெர்னாட்ஷாவிடம் அவர் நண்பர் பெர்னாட்ஷாவிற்கு காது கேட்காது என்பதைத் தெரிந்து கொண்டு , "நீங்கள் காதில் இயர்போன் வைத்துக் கொள்ள வேண்டியதுதானே?' என்றார்.
உடனே பெர்னாட்ஷா , "உங்களைப் போன்றவர்கள் என்னிடம் அதிகம் சத்தம் போட்டு பேச முடியாது. மேலும் நீங்கள் பேசினாலும் அதிக நேரம் பேச முடியாது. உங்களைப் போன்றவர்கள் அரட்டை அடிக்கவும் முடியாது. இதனால் எனது நேரமும் வீணாவதில்லை' என்றார்.