தினமணி கொண்டாட்டம்

குளியலறையில் மயக்கம்

சாய் சதீஷ்

நம்மில் ஆரோக்கியமான பலர் திடீரென குளியலறையில் விழுந்த பிறகு பக்கவாதம் மற்றும் மயக்கம் போன்ற கவலையான செய்திகள் பலவற்றை நாம் அடிக்கடி கேள்விப் படுகிறோம். பெரும்பாலும் குளியலறை தவிர வேறொரு இடத்தில் விழுவதை நாம் ஏன் கேள்விப்படவில்லை?

ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்ற கலந்துரையாடல் வகுப்பில் பங்கேற்ற போது கிடைத்த தகவல் சகோதரர் ஒருவர் கூறும்போது:

குளிக்கும் போது முதலில் தலைமுடியைக் அலச வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.

நாம் குளிக்கும்போது முதலில் உடலின் மற்ற பாகங்களை கழுவ வேண்டும். ஏனென்றால், தலை ஈரமாகவும் குளிராகவும் இருக்கும்போது, தலையை சூடாக்க ரத்தம் நம் தலையை நோக்கி பாயும்.

அச்சமயத்தில் ரத்தம் பயணிக்கக்கூடிய நாளங்கள் குறுகினால், அது ரத்த நாளங்களை சிதைப்பதற்கு வாய்ப்புள்ளது.

இது வழக்கமாக குளியலறையில் மட்டுமே நடப்பதால், நமக்கும் நமது உற்றார் உறவினர்களுக்கும் இதுபோன்று நிகழாமல் இருக்கவே இந்த விழிப்புணர்வு பதிவு.

நாம் முதலில் குளிக்கும்போது எதில் இருந்து நீர் ஊற்ற தொடங்கி பின் தலைக்கு எப்படி நீர் ஊற்ற வேண்டும் என்பதை வரிசை படியாக கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.*

1. ஈரப்பதம் பாதத்தின் அடிப் பகுதியிலிருந்து தொடங்குகிறது.
2. பாதத்திற்கு மேல் உள்ள முழங்கால் பகுதி.
3. தொடைகள்.
4. அடிவயிறு.
5. தோள்பட்டை.
6. 5-10 விநாடிகள் நீர் ஊற்றாமல் சிறு இடைவேளை.

இச்சமயத்தில் நம் உடலில் இருந்து நீராவி அல்லது காற்று நிரம்பி வழிவது போல் உணருவோம், பின்னர் வழக்கம் போல் தலைக்கு நீரூற்றி குளிக்கவும்.
ஞானம்:

முதலில் நேரடியாக தலைக்கு நீர் ஊற்றுவது என்பது சூடான நீரில் நிரப்பப்பட்ட கண்ணாடி கிளாஸில் , குளிர்ந்த நீரை நிரப்பினால். என்ன நடக்கும்?

கண்ணாடியில் வெடிப்பு ஏற்பட்டு உடையும் நிலை வரும் !!!

இதேபோன்ற நிகழ்வு நம் உடலில் ஏற்பட்டால் ... எது உடையும்?

பொதுவாக நமது உடல் வெப்பநிலை சூடாகவும், தண்ணீர் குளிராகவும் இருக்கிறது, எனவே முதலில் நாம் உடலில் அல்லது தலையில் நேரடியாக நீர் ஊற்றும்போது, ரத்த நாளங்கள் சிதைவதால் காற்று சிக்கிக் கொள்ளும் அல்லது அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

இதனால்தான் மக்கள் திடீரென குளியலறையில் விழுவதை நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம்.

தவறான குளியல் முறையின் காரணமாகவே, பலருக்கு பக்கவாதம் அல்லது ஒற்றைத் தலைவலி ஏற்படுகிறது.

இந்த பாதம் முதல் தலைவரை நீரூற்றி குளிக்கும் முறையானது அனைத்து வயதினருக்கும் பொருத்தமானது.

அதிலும் குறிப்பாக நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் ஒற்றைத் தலைவலி / தலைவலி உள்ளவர்களுக்கு மிகவும் ஏற்றது.

அன்றாட வாழ்வில் நம்முடன் ஒன்றிப்போன குளியல் என்ற முக்கியமான பகுதியினை முறையுடன் செய்து ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு இதுவே சிறந்த வழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

அண்ணாநகருக்கு விமோசனம்: வரவிருக்கிறது வாகன நிறுத்துமிடம்!

அழகின் சிரிப்பு!

ஏப்.28 வரை வெயில் இயல்பை விட அதிகரிக்கும்!

SCROLL FOR NEXT