தினமணி கொண்டாட்டம்

ஒரு நடிகனின் கதை!

ஜி.அ.


திரையுலகில் புகழின் உச்சத்தில் இருந்த போது ஆனந்த விகடன் இதழில் நாகேஷ் ஒரு சிறுகதை எழுதியிருந்தார். "வெள்ளிக் கோப்பை' என்பது தலைப்பு.

"இரண்டு நண்பர்கள் (நாடகக் கலைஞர்கள்) சினிமா வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவனுக்கு மட்டும் சினிமா வாய்ப்பு வருகிறது. அவன் ஏற்றுக் கொள்ளத் தயங்கும் போது, மற்றொருவன் அவனது தயக்கத்தைப் போக்கி துணிச்சலாக ஏற்றுக் கொள்ள வைக்கிறான்.

நாள்கள் ஓடுகின்றன. சினிமாவுக்குப் போன நண்பன் பெரியாளாகி விடுகிறான். நீண்ட நாளைக்குப் பிறகு நண்பனைப் பார்க்க வந்த ஏழை நண்பன் உரிமையுடன் அவன் சட்டையை எடுத்துப் போடுகிறான். அதை வீட்டு வேலைக்காரன் தடுக்கிறான். நண்பனிடம் வேலைக்காரனின் செயலைக் கண்டிக்கச் சொல்லி கேட்கிறான் ஏழை நண்பன். ஆனால் வேலைக்காரனின் செயலை சரி என்கிறான் நடிக நண்பன். கோபித்துக் கொண்டு புறப்படுகிறான் ஏழை.

பின்னால் ஓடி வரும் நண்பன் தனக்கிருக்கும் தோல் நோய் பற்றி விளக்குகிறான். நண்பனைக் கட்டிக் கொண்டு ஏழை நண்பன் அழுவதோடு கதை முடிகிறது'.

நாகேஷ் புகழின் உச்சத்தில் இருந்தபோது எழுதப்பட்ட இந்தக் கதை அன்று சிறப்பாக பேசப்பட்டது. இதில் நாம் நடிக நண்பனாக நாகேஷைத்தான் நினைத்துக் கொள்வோம். உண்மையில் அந்த ஏழை நண்பன்தான் அவர்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனியில் தீத் தொண்டு வாரம்

வாக்குகளுடன் ஒப்புகைச் சீட்டுகளை ஒப்பீடு கோரிய வழக்கு: தீா்ப்பு ஒத்திவைப்பு

வாக்குச்சாவடிக்கு செல்ல இலவச வாகன வசதி

துபையில் கனமழை : விமானங்கள் ரத்து - சென்னையில் பயணிகள் வாக்குவாதம்

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் 16.07 லட்சம் போ் வாக்களிக்க ஏற்பாடு

SCROLL FOR NEXT