தினமணி கதிர்

மீண்டும் வருவேன்...

டெல்டா அசோக்

நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் தொடர்பான வழக்கில் சிக்கி பிறகு அண்மையில் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.  இந்த விவகாரத்தில் ஷாருக்கான்,  அவரது குடும்பத்தினர் கடந்த சில ஆண்டுகளாகவே வருத்தத்தில் இருந்தனர்.  இதன் காரணமாக , ஷாருக்கானால் சினிமாவில் கவனம் செலுத்த முடியாமல் போனது. 

இந்த நிலையில்,  4  ஆண்டுகளுக்குப் பிறகு சினிமாவில் முத்திரை வெற்றி, கவனம் ஈர்த்த கை கடிகாரம்,  ஓய்வுக்குப் பின்னர் என்ன? என்ற கேள்விக்கு பதில் என எழுந்து நிற்கிறார் ஷாருக்கான்.

முதல் வாரத்திலேயே ரூ.300 கோடி : ஷாருக்கானின் நடிப்பில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு "பதான்' படம் திரைக்கு வந்து  சாதனை படைத்துள்ளது. உலகம் முழுவதும் பதான் படம் 100 நாடுகளில் வெளியானது இன்னொரு சாதனை. நாடு முழுக்க ரசிகர்கள் ஏற்கெனவே ஒரு வாரத்துக்குத் தேவையான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தது மற்றொரு சாதனை. இதற்கு முன்பு இதுபோன்று இந்திய திரைப்படம் 100 நாடுகளில் வெளியானது கிடையாது. 

திரைப்படத் தொழில் நிபுணர் தரன் ஆதர்ஷ்  வெளியிட்ட டிவிட்டர் செய்தியில், ""100 நாடுகளில் 2,500 திரையரங்குகளில் பதான் வெளியாகிறது. இந்த அளவுக்கு அதிகமான நாடுகளில் வெளியான இந்திய திரைப்படம் இதுதான்'' என்று குறிப்பிட்டார். ""முதல் நாளில் 4 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகும் என்று எதிர்பார்த்தேன். அந்தச் சாதனையை மீறி டிக்கெட்கள் விற்பனையாகியுள்ளது'' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதுவரை முதல் நாளில் அதிக டிக்கெட்டுகள் விற்பனையான முதல் ஐந்து படங்களோடு "பதான்' பட விற்பனையை ஒப்பிட்டுக் காட்டியுள்ள தரன் முதல் நாளிலேயே "பதான்' படத்துக்கு 3.9 லட்சம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்திருப்பதாக தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

"பதான்' படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். "பதான்' பட வெளியீட்டை தொடர்ந்து ஷாருக்கான் தனது வீட்டுக்கு வெளியில் கூடியிருந்த ரசிகர்களை தனது வீட்டு பால்கனி வழியாக பார்த்து கையசைத்து வாழ்த்துகளைப் பெற்றார். 

மும்பையில் "பதான்' படத்தின் முதல் காட்சி  இரவு 12 மணிக்கு பாந்த்ரா கேலக்ஷி தியேட்டரில் திரையிடப்பட்டது. மும்பை முழுக்க தியேட்டர்களில் ஷாருக்கான் ரசிகர்கள் ராட்சத பேனர்கள் வைத்தனர். முன்னதாக,  இந்த படத்துக்கு வலதுசாரி அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டமும் நடத்தின. சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி திரைப்படங்களுக்கு எதிராக தேவையற்ற கருத்துகளை தெரிவிக்கவேண்டாம் என்று கட்சித் தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டார்.  

இதைத் தொடர்ந்து,  இப்பிரச்னை முடிவுக்கு வந்தது. பாலிவுட்டில் இதுவரை எந்த ஒரு படமும் வெளியாகி முதல் வாரத்தில் 300 கோடி ரூபாயை வசூலித்ததில்லை. அந்த வகையில் "பதான்' புதிய சாதனை படைத்திருக்கிறது. இந்தியா முழுக்க ரசிகர்களிடம் அதிக வரவேற்பு இருந்ததால் படம் மேலும் 300 காட்சிகள் அதிகரிக்கப்பட்டு திரையிடப்பட்டது.  பலத்த சர்ச்சை, எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான படம் பெரிய அளவில் மக்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. 

உலகம் முழுவதும் படம் நல்ல வசூலைப் பெற்று வருகிறது. படத்தின் முதல் நாளில் மட்டும் 57 கோடி ரூபாய் வசூலாகி இருக்கிறது. இதில் 2 கோடி ரூபாய் தமிழ், தெலுங்கு டப்பிங் ரிலீஸ் மூலம் கிடைத்துள்ளது. இந்தியாவில் மட்டும் மூன்று நாள்களில் 163 கோடியை படம் வசூலித்துள்ளது. "பாகுபலி 2', "கே.ஜி.எஃப் 2' ஆகிய படங்களின் வசூல் சாதனைகளையும் "பதான்' முறியடித்து இருக்கிறது. உலக அளவில் "பதான்' படம் ரூ.313 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பாலிவுட்டில் இதுவரை எந்த ஒரு படமும் வெளியாகி முதல் வாரத்தில் 300 கோடி ரூபாயை வசூலித்ததில்லை. அந்த வகையில் "பதான்' புதிய சாதனை படைத்திருக்கிறது. 

யாஷ் ராஜ் நிறுவனத்தின் ஆதித்ய சோப்ராவின் தயாரிப்பான இப்படத்தில் நடிகர் சல்மான் கான் கெளரவ வேடத்தில் நடித்திருக்கிறார். "பதான்' படத்தின் பாடலில் தீபிகா படுகோன் அணிந்திருந்த பிகினி ஆடையின் நிறம் தொடர்பாக சர்ச்சை எழுந்தது. அப்பாடலைப் படத்திலிருந்து நீக்கவேண்டும் என்று சில அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன. ஆனால் எதிர்ப்புகளை மீறி படம் வெளியான போது படத்தில் இடம்பெற்ற அப்பாடல் கட் செய்யப்படாமல் இருந்தது.

கவனம் ஈர்த்த கை கடிகாரம்:  "பதான்' பட நிகழ்ச்சியில்  சமீபத்தில் ஷாரூக்கான் கலந்து கொண்டபோது அவர் அணிந்திருந்த கை கடிகாரம் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் விதத்தில் அமைந்திருந்தது. ஊதா கலரில் அவர் அணிந்திருந்த அந்த கை கடிகாரம் பல கோடி ரூபாய் மதிப்புடையதாகும். "பதான்' பட நாயகி தீபிகா படுகோன் தனது ட்விட்டர் பக்கத்தில் விடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் ஸ்கின்கேர் திரவம் ஒன்றை ஷாருக்கானிடம் கொடுத்துப் பயன்படுத்திப் பார்க்கும்படி தீபிகா கேட்டுக் கொண்டார். ஷாருக்கானும் அதில் சிறிது எடுத்து தனது முகத்தில் தடவிக்கொள்வார். இந்த வீடியோவிலும் ஷாருக்கானின் கையில் அந்த விலையுயர்ந்த ஊதா கலர் கைக்கடிகாரம் இடம் பெற்றிருந்தது. அந்தக் கை கடிகாரத்தின் விலை ரூ.4.98 கோடியாகும். அதை ஷாருக்கான் சுவிட்சர்லாந்தில் வாங்கியிருக்கிறார். அது புகழ்பெற்ற, பாரம்பர்யமிக்க ஆடெமர்ஸ் பிகுட்  என்ற பிராண்ட் வாட்ச். இதன் மாடல் பெயர் "ராயல் ஓக் காலண்டர் வாட்ச்' என்று கூறப்படுகிறது.

என்னை வீழ்த்த நினைத்தால்... நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான அவரது "பதான்' திரைப்படம் பெரும் வசூலைக் குவித்திருப்பதால் பாலிவுட்டுக்கே ஒரு நல்ல புத்துணர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. இதையடுத்து அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் "ஜவான்' படத்தின் படப்பிடிப்பு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ட்விட்டரில் ஒருவர் ஷாருக் கானிடம், "நீங்கள் ஓய்வுபெற்ற பிறகு உங்களுக்கு அடுத்த பெரிய நட்சத்திரம் யார்?" என்று கேட்டுள்ளார். அதற்கு ஷாருக்கான்,   நான் ஒருபோதும் நடிப்பிலிருந்து ஓய்வு பெற மாட்டேன். ஒருவேளை என்னை வீழ்த்த நினைத்தால், நான் முன்பைவிடவும் அதிரடியான கம்பேக்கைத் தருவேன்" என்று கூறியுள்ளார். ஷாருக்கானின் பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது: வட மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT