""சினிமா தியேட்டர் கவுன்ட்டர்ல ஏன் இஞ்சி மிடடாய் தர்றாங்க?''
""கதையை ஜீரணிக்கத்தான்''
-எஸ்.வேல் அரவிந்த்,
திண்டுக்கல்.
""சார்.. என்கிட்ட ரெண்டு வரியில ஒரு கதை இருக்கு?''
""என்கிட்ட கொடுங்க.. 200 எபிசோட் டி.வி. சீரியல் எடுத்துடுறேன்''.
-பி.பாலாஜி கணேஷ்,
சிதம்பரம்.
""மகளிர் அணித் தலைவியை காதலிச்சது தப்பாப் போச்சு''
""ஏன்?''
""கூட்டமா காதலிக்க பீச்சுக்கு வர்றாங்க!''
-ஆர்.சுந்தரராஜன்,
சிதம்பரம்
""சார்.. உங்க ஆபிசில் பாம்பு வந்ததுன்னு சொன்னீங்களே.. பிறகு என்னாச்சு?''
""அதுவும் எங்க கூட சேர்ந்து தூங்கிருச்சி''
-ஆர்.ஜெயலட்சுமி,
திருநெல்வேலி.
""ராப்பிச்சை திட்டிட்டு போறானே? ஏன்?''
""பிரியாணி- ஷவர்மா போட்டதுக்குதான்''
-அ.சுஹைல் ரஹ்மான்,
திருச்சி.
""ஏம்பா.. இந்தக் கிளியின் மூக்கை கட்டி வச்சி இருக்கே..?''
""இது மோசமான கிளிங்க.. வர்ற கஸ்டமர்கிட்ட "இந்த ஆள் கப்ஸா விடறான்னு' சொல்லுது. அதனாலே சீட்டு எடுக்க மட்டும் வாய்க்கட்டை அவிழ்த்து விடுவேன்''.
- வண்ணை கணேசன்,
சென்னை.