""என் கணவர் பயங்கர குடிகாரர்''
""நிஜமாவா''
""ஆமாம். சட்டை போட்டா கூட புல் கை சட்டைதான் போடு வாருன்னா பார்த்துக்கோயேன்...''
- தீபிகா சாரதி,
சென்னை.
""இட்லி பூ மாதிரி இருக்கும் மேடம்! தலைக்கு ரெண்டு வெச்சிடவா மேடம்?''
""தலைக்கெல்லாம் வைக்க வேண்டாம். இலையிலேயே வெச்சிடுப்பா..!''
-வி.ரேவதி,
தஞ்சை.
""சிஸ்டர்.. மூச்சு விட முடியலேன்னு இங்க ஒரு பேஷண்ட் இருந்தாரே எங்கே அவர்?''
""நீங்க.. ஆபரேஷன் செய்யணும்னு சொன்னீங்க..
அதான் மூச்சை கையிலேயே பிடிச்சிட்டு ஓடியே போயிட்டார்''
-வண்ணை கணேசன்,
சென்னை.
""உங்க வீட்டுல மொத்தமா எத்தனை பேரு''
""எங்க வீட்டுல மொத்தமா யாருமே இல்லீங்க.. எல்லோருமே ஒல்லிதான்''
-எஸ்.கர்ணா,
மதுரை.
""ஏம்பா? நீ திருந்தி வாழறதா சொன்னாங்களே..?''
""ஆமாங்க.. எசமான்! இப்ப எல்லாம் ஏழை-பாழைங்க கிட்டே ஜேப்படி பண்றது இல்லே''
-அ.சுஹைல் ரஹ்மான்,
திருச்சி.
""எனக்கு கல்யாணம் ஆவது லேட்டாயிட்டே இருக்கு.
ஏதாவது பரிகாரம் இருந்தா சொல்லுங்க ஜோசியரே..!''
""ராமேசுவரம் போயிட்டு வாங்க..''
""என் சொந்த ஊரே ராமேசுவரம்தான்..''
-அ.ப.ஜெயபால்,
சிதம்பரம்.