""மருந்து பாட்டிலை ஏன் தடவிகிட்டு இருக்கே!''
""டாக்டர்தான் தலைவலிச்சா இதை தடவச் சொன்னாரு!''
-டி.மோகனதாஸ்,
நாகர்கோவில்.
""என்னய்யா ஓட்டல் இது.. நேத்து வச்ச குழம்பை சூடு பண்ணி ஊத்துன மாதிரி இருக்கு!''
""நாங்கதான் வீட்டுமுறை சமையல்னு போட்டு வச்சிருக்கோமே .. ஸார்!''
- பா.சக்திவேல்,
கோயம்புத்தூர்.
""அம்மா தாயே தர்மம் பண்ணுங்க...''
""பணம் எடுத்துட்டு வரலைப்பா...''
""பரவாயில்லைம்மா...ஜி பே உங்களிடம் இருக்கா?''
-சரஸ்வதி செந்தில்,
பொறையார்.
""பியூட்டி பார்லர் உள்ளேர்ந்து வெளியே வந்த பெண்ணை பார்த்து பல்லை காண்பித்தது தப்பா போச்சு!''
""ஏன்?''
""கடைசியிலேயே பார்த்தா அவ என் மனைவி''
-தீபிகா சாரதி,
சென்னை.
""மாப்ளே.. ஏன் சோகமா இருக்கே!''
""ஜானகி என்ற பேரில் மெசேஜ் வந்துட்டு இருந்துச்சே.. முழு பெயரைக் கேட்டா ஷாக் ஆகிட்டேன்''
""ஏன் அப்படி''
""ஜானகிராமனாம்!''
- டிங்கர் ஆர்.குமார்,
சிதம்பரம்.
""என்ன சார்! மொட்டையா புகார் கொடுக்கிறீங்க!''
""அநியாயமா இருக்கே.. என் தலையில முடி வளர்ற வரைக்கும் கொடுக்க முடியாதா?''
-ப.சரவணன்,
ஸ்ரீரங்கம்.