தினமணி கதிர்

திரைக்கதிர்

DIN


தெலுங்கு திரைப்பட நடிகர் மகேஷ்பாபு புகையிலை நிறுவனத்தின் விளம்பரப் படமொன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். புகையிலையை விளம்பரப்படுத்த தடை உள்ளதால் அந்த புகையிலை நிறுவனத்தின் வேறு ஒரு பொருளை விளம்பரப்படுத்தும் படத்தில்தான் அவர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் இதில் மகேஷ்பாபு நடிக்க பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

------------------------------

சாய்பல்லவி ரூ.2 கோடி கொடுத்தும் முக அழகு கிரீம் விளம்பரப் படமொன்றில் நடிக்க மறுத்து விட்டார். அதற்கு அவர், ""கிரீம் போட்டு கருப்பாக உள்ள நிறத்தை சிவப்பாக மாற்ற முடியாது. எனவே இந்த விளம்பரப் படம் மூலம் மக்களை ஏமாற்ற விரும்பவில்லை'' என்று காரணமும் சொன்னார். அவரேஅப்படி இருக்கும்போது மகேஷ்பாபு பெரிய கோடீஸ்வரர். அவரது தந்தை நிறையப் படங்களைத் தயாரித்து இருக்கிறார். பெரியஅளவில் சொத்து இருக்கிறது. இப்படி புகையிலை நிறுவன விளம்பரப் படத்தில் நடிப்பது சரியா என்று வலைதளத்தில் கடுமையான கண்டனங்களைப் பலரும் பதிவு செய்து வருகிறார்கள். இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

------------------------------

"தென்மேற்கு பருவக்காற்று', "நீர்ப்பறவை', "தர்மதுரை', என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கிய சீனு ராமசாமி, அடுத்ததாக இயக்கி உள்ள படம் "இடிமுழக்கம்'. ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக காயத்ரி சங்கர் நடித்துள்ளார். மேலும் சரண்யா பொன்வண்ணன், சுபிக்ஷா, செளந்தரராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதுகுறித்து சுட்டுரையில் பதிவிட்டுள்ள ஜி.வி.பிரகாஷ், "இடிமுழக்கம் படப்பிடிப்பு இனிதே நிறைவு பெற்றது, திருவிழா முடிந்து பள்ளிக்கு செல்லப் போகும் மாணவனைப் போல சென்னை வருகிறேன். இந்த அழகான நாட்களை நினைவுகளாக எனக்கு தந்த சீனு ராமசாமிக்கு நன்றி' என குறிப்பிட்டுள்ளார்.

------------------------------

தமிழ் சினிமாவில் 90-களில் புகழ்பெற்ற முன்னணி நடிகைகளுள் முக்கியமானவர் நடிகை மீனா. தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினியுடன் "அண்ணாத்த' படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை மீனா, தனது மகள் நைனிகாவுடன் எடுத்துள்ள போட்டோ ஷூட் ஒன்றை வெளியிட்டுள்ளார். சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் லைக்குகளை பெற்றுவருகின்றன. மீனாவின் மகள் நைனிகா, விஜய்யின் "தெறி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்தார்.

------------------------------

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சமீப ஆண்டுகளில் மிகவும் பிரபலமானது "பிக்பாஸ்' நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. 5-ஆவது சீசன் வருகிற அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. தற்போது இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார்."பிக்பாஸ் 5' நிகழ்ச்சிக்கான புரோமோ விடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. தற்போது புதிய புரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், "இந்த வீட்டில் கிசுகிசு பேசுறது ரொம்ப கஷ்டம் போல...' என்று பேசும் விடியோ ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து சமூக வலை தளத்தில் வைரலாகி வருகிறது.

------------------------------


எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சமுத்திரக்கனி, சாக்ஷி அகர்வால், இனியா, பருத்தி வீரன் சரவணன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் "நான் கடவுள் இல்லை'.

இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் ஆண்டனி, இயக்குநர்கள் ராஜேஷ், பொன்ராம், தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

இதில் சமுத்திரகனி பேசும் போது, ""எஸ்.ஏ.சந்திரசேகர் சார் இயக்கத்தில் நடித்தது பெருமை. அவருடைய உருவத்தில் என்னுடைய குருநாதர் கே.பாலச்சந்தர் சாரைப் பார்த்தது போல் இருந்தது. இவர் மூலம் கே.பாலசந்தர் சார் மீண்டும் கிடைத்து விட்டார்'' என்றார்.

எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும் போது, ""எனக்கும் விஜய்க்கும் பிரச்னை இருக்கிறது. எந்த வீட்டில்தான் பிரச்னை இல்லை. எந்த வீட்டிலும் அப்பா, மகன் சண்டை போடுவது இல்லையா... சில நாள்களில் கட்டிப்பிடித்துக் கொள்வார்கள். அதுபோல் தான் நானும் விஜய்யும். இன்று சண்டை போட்டுக் கொள்வோம், நாளை சேருவோம். சமுத்திரகனியை தமிழ்நாட்டில் அதிகம் பார்க்க முடியவில்லை. ஐதராபாத்தில் தங்கி தெலுங்கு படங்களில் அதிகம் நடித்து வருகிறார். சிறப்பான வளர்ச்சி. பொதுவாக நடிகைகள் நடிக்கிறதோடு சரி, டப்பிங் பேச வர மாட்டாங்க, புரோமோஷனுக்கு வர மாட்டாங்க... ஆனா எனக்கு இந்த படத்தில் நடித்த இனியா, சாக்ஷி அகர்வால் என இரண்டு நடிகைகள், நடித்து முடித்து, டப்பிங் பேசி, பட விழாவிற்கும் வந்து இருக்கிறார்கள். ரொம்ப
சந்தோஷம்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

SCROLL FOR NEXT