முழு மூச்சாக படப்பிடிப்புகளில் வேகம் எடுக்கத் தொடங்கியிருக்கிறார் சிலம்பரசன். "ஈஸ்வரன்' படத்தை அடுத்து "மாநாடு' படப்பிடிப்பில் அவர் காட்டும் வேகம் படக்குழுவை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதே வேகத்தில் பயணித்தால், சிலம்பரசன் ஆண்டுக்கு மூன்று படங்களை தராளமாகத் தரலாம்
என்கிறது கோலிவுட் வட்டாரம்.
--------------------------------------------------------------------
"அண்ணாத்த' படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் செல்வதற்கு ஒரே விமானத்தில் மீனாவும், குஷ்புவும் பயணம் செய்துள்ளார்கள். "வீரா' படத்திற்குப் பின் மீனாவும், "பாண்டியன்' படத்திற்குப் பின் குஷ்புவும் கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர்.
--------------------------------------------------------------------
"பிசாசு-2' பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் அதே போன்ற கெட்அப்பில் தோற்றமளிக்கும் தனது பாட்டியின் புகைப்படத்தையும் ஒன்றாக வெளியிட்டுள்ளார் ஆண்ட்ரியா. இந்த "பிசாசு-2' பர்ஸ்ட்லுக்கிற்கு பின் ஒரு கதை உள்ளது என்கிறார் ஆண்ட்ரியா.
--------------------------------------------------------------------
"யாவரும் நலம்', "தீராத விளையாட்டு பிள்ளை', "யுத்தம் செய்', "ஆதிபகவன்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நீது சந்திரா. இவர், இப்போது ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். "நெவர் பேக் டவுன்' படத்தின் நான்காம் பாகமாக உருவாகும் "நெவர் பேக் டவுன் : ரிவால்ட்' என்ற படத்தில் நடிக்கிறார்.
--------------------------------------------------------------------
ந்தியில் "தி பேமிலி மேன்' என்கிற சூப்பர் ஹிட்டான வெப் சீரிசை இயக்கியவர்கள் இரட்டை இயக்குநர்களான ராஜ்- டிகே. தற்போது இவர்கள் இயக்கவுள்ள புதிய வெப் சீரிசில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளார்.
--------------------------------------------------------------------
தொலைக்காட்சி சேனல்களில் இருந்து வந்து சினிமாவில் நாயகிகளான சரண்யா, பிரியா பவானி சங்கர், வாணி போஜன், வித்யா பிரதீப் வரிசையில் இப்போது தர்ஷா குப்தா இணைந்துள்ளார். "ருத்ரதாண்டவம்' என்ற படத்தில் ரிச்சர்டு ரிஷிக்கு ஜோடியாக நடிக்கிறார்.
--------------------------------------------------------------------
இயக்குநர் செல்வராகவன் நடிகராக களம் இறங்கியுள்ள படம் "சாணிக்காயிதம்'. இப்படத்தை அருண் மாதேஸ்வன் இயக்குகிறார். இதன் முழு திரைக்கதையையும் படித்து முடித்த செல்வராகவன் வெகுவாக இயக்குநரின் திறமையைப் புகழ்ந்துள்ளாராம்.