""தண்ணியடிச்சிருந்தா மட்டும் என் மனைவிகிட்ட நான் வாயே திறக்க மாட்டேன்!''
""உங்க மனைவி, தண்ணி கூடவா அடிப்பாங்க?''
""தலைவர், தன்னோட வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டாம்னு சொல்லிட்டாராமே?''
""ஆமா... வீட்டைச் சுற்றி போலீஸ் நின்னா ஹவுஸ் அரஸ்ட் மாதிரி ஃபீல் ஆகுதாம்!''
""இந்த ஆஸ்பத்திரியில அப்படி என்ன விசேஷம்?''
""தூக்கம் வரலைன்னு யாராவது சொன்னா அதற்கு மாத்திரை மருந்து கொடுக்காமல், நர்ûஸ விட்டு கதை சொல்லச் சொல்லி தூங்க வைப்பாங்க!''
""எங்க பால்காரர் கிணத்துல விழுந்து செத்துட்டாராம்''
""பாகனுக்கு யானையால சாவு, பாம்பாட்டிக்கு பாம்பால சாவுங்கிற மாதிரி ஆயிடிச்சே சார் ''
""மனைவியே தலையை விரிச்சுப் போட்டுக்கிட்டு நின்னாலும் பின்னிடுவேன், பின்னி''
""பின்னல் மட்டும்தானா? பூவும் வச்சு விடுவீங்களா''
கணவன் : ஊசிப்போன உப்புமாவை அந்த பிச்சைக்காரனுக்குப் போட்டியா?
மனைவி : இல்லையே!
கணவன் : யாரையோ திட்டிக்கிட்டே போனான்... அதான் கேட்டேன்!
-வி. ரேவதி, தஞ்சை.