(வேதாரண்யம் வடக்கு வீதியில் ஆடவர் ரெடிமேட் ஷாப் ஒன்றின் பெயர்)
" T N - 51'
- ப. சீனிவாசன், கோடியக்கரை.
(பென்னாகரம்-நாகமரை சாலையில் உள்ள ஊரின் பெயர்)
நெருப்பூர்
ப.நரசிம்மன், தருமபுரி.
(கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தூர் அருகே அமைந்த கல்யாண மண்டபத்தின் பெயர்)
சுமங்கலி திருமண மண்டபம்.
ம.அக்ஷயா, அரூர்
(திருச்சி கடைவீதியில் இருவர்)
""போன வருஷம் தீபாவளிக்கு எங்க கடை முதலாளி புது பேண்ட், சட்டை எடுத்துக் குடுத்தாரு''
""இந்த வருஷம் என்ன வேஷ்டி, சட்டையா?''
""அட நீ வேற.. நடக்கற வியாபாரத்துக்கு புதுசா மாஸ்க் மட்டும் தான் வாங்கித் தருவாருன்னு நினைக்கிறேன்''
சிவம், திருச்சி.
(சென்னை பெருங்குடி கங்கை அம்மன் கோயில் அருகே இருவர்)
பெரியவர்: அந்த காலத்துல, நான், எள்ளுன்னா எண்ணெய்யோட நிற்பேன்!
சிறுவன்: அப்பவே... உங்களுக்கு காது கேட்காதா தாத்தா!
பெரியவர்: ""...... .......''
வி.சி. கிருஷ்ணரத்னம்,
பெருங்குடி.
இவர்கள் ஏன் இப்படி என்பதை விட,
இவர்கள் இப்படித் தான் என்று நினைத்து விலகி விடுவதே
நமக்கு நல்லது!
எல்.மோகனசுந்தரி,
கிருஷ்ணகிரி.