நீங்கள் ஏன் நகைச்சுவையைத் தேர்ந்தெடுத்தீர்கள்? என்று தேங்காய் சீனிவாசனிடம் கேட்டபோது,
"நான் என் பெற்றோருக்கு ஒரே மகன். கவலையின்றி வாழ்ந்தவன். பொழுதுபோக்குவதற்காக வருபவர்களை மகிழ்விக்க வேண்டுமே தவிர, குடும்பக் கவலைகளை கிளறிவிடக்கூடாது என்று நினைத்தேன். அதற்காக நகைச்சுவை பாத்திரமேற்றேன். எடுத்த எடுப்பிலேயே ஜனாதிபதி பரிசு பெற்றதால் அதையே தொடர்ந்தேன். இடையே நான் கதறியழும் நிலையும் ஏற்பட்டது. இந்த நிலை யாருக்கும் ஏற்படக்கூடாது என்றும் மற்றவர்களை மகிழ்விக்க வேண்டும் என்றும் அப்போது உறுதி செய்தேன்'' என்றார் அவர்.
("திரையுலகத் திலகங்கள்' என்ற நூலிலிருந்து)
எல்.நஞ்சன்