மைக்ரோ கதை

ஒருவருடைய மனைவியை அவர்   வளர்த்த காளை மாடு முட்டிக் கொன்றுவிட்டது. அந்த மனைவியின் இறுதிச் சடங்கை நடத்தி வைத்த புரோகிதர் விசித்திரமான  சம்பவத்தைக் கவனித்தார்
மைக்ரோ கதை

ஒருவருடைய மனைவியை அவர்   வளர்த்த காளை மாடு முட்டிக் கொன்றுவிட்டது. அந்த மனைவியின் இறுதிச் சடங்கை நடத்தி வைத்த புரோகிதர் விசித்திரமான  சம்பவத்தைக் கவனித்தார். துக்கம் கேட்ட பெண்கள் அந்த விவசாயியை நெருங்கி வந்து ஏதோ காதில் சொல்கிறபோது, ஒரு நிமிடம் கேட்டுவிட்டு, "ஆமாம்'' என்று தலையசைத்தார்.  ஆனால் துக்கம் கேட்க வந்த ஆண்கள் நெருங்கி வந்து ஏதோ சொல்கிறபோது, "இல்லை'' என்று தலையசைத்தார். 
அது தொடர்ந்து கொண்டே இருந்தது.  இறுதிச் சடங்கெல்லாம் முடிந்த பின்னர் புரோகிதர் அந்த விவசாயியிடம், " பெண்களிடம் பேசும்போது ஆமாம் என்றும் ஆண்களிடம் பேசும்போது இல்லையென்றும் தலைஅசைத்தீர்களே, அது ஏன்?''  என்று கேட்டார்.  அதற்கு அந்த விவசாயி சொன்னார்: " பெண்கள் எல்லாம் வந்து என் மனைவியின் நல்ல குணத்தைப் புகழ்ந்து பேசினார்கள். அதனால் ஆமாம் என்றேன். ஆண்கள் எல்லாரும் என்னிடம் வந்து அந்தக் காளை மாட்டை விலைக்குக் கேட்டார்கள். இல்லை என்றேன்''
மா.உலகநாதன், திருநீலக்குடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com