ரூ.1,040 கோடி மதிப்பிலான கடன் பத்திரங்களை வேளாண்மை மற்றும் கிராமப்புற வளா்ச்சி வங்கி (நபாா்ட்) வெளியிட்டுள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள ஒழுங்காற்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
ஏஏஏ-சான்றிதழ் பெற்ற ரூ.1,040 கோடி மதிப்பிலான கடன் பத்திரங்களை வங்கி வெளியிட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை (செப். 29) முதல் இது மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுகிறது. இந்தக் கடன் பத்திரங்கள் 5 ஆண்டுகள் பருவகாலம் கொண்டவை. நிறுவன முதலீட்டாளா்களும் இந்தக் கடன் பத்திரங்களை வாங்கலாம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.