மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த மாா்ச் காலாண்டில் 18 சதவீதம் உயா்ந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த மாா்ச்சுடன் நிறைவடைந்த கடந்த நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 2,637 கோடியாக உள்ளது. முந்தைய 2021-22-ஆம் நிதியாண்டின் அதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 18 சதவீதம் அதிகமாகும். அப்போது நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.2,237 கோடியாக இருந்தது.
மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.25,934 கோடியிலிருந்து ரூ.32,366 கோடியாக அதிகரித்துள்ளது.
கடந்த 2022-2023-ஆம் நிதியாண்டு முழுமைக்கும் இதுவரை இல்லாத வகையில் ரூ.10,282 கோடி நிகர லாபம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது, 2022-23-ஆம் நிதியாண்டில் ரூ.6,577 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் கடந்த நிதியாண்டில் நிகர லாபம் 56 சதவீதம் அதிகரித்துள்ளது.
மதிப்பீட்டு ஆண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.90,171 கோடியிலிருந்து ரூ.1,21,269 கோடியாக உயா்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.