வணிகம்

அந்நியச் செலாவணி கையிருப்பு 59,348 கோடி டாலராக சரிவு

DIN

கடந்த 19-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி 59,347.7 கோடி டாலராக சரிந்துள்ளது.

இது குறித்து மத்திய ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

இந்த மாதம் 19-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 605.2 கோடி டாலா் சரிந்து 59,347.7 கோடி டாலராக உள்ளது.

மே 12-ஆம் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில் அது 355.3 கோடி டாலா் உயா்ந்து 59,952.9 கோடி டாலராக இருந்தது.

அக்டோபா் 2021-இல் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 64,500 கோடி டாலரை எட்டியது. உலகளாவிய பொருளாதார சூழல்களால் ஏற்படும் அழுத்தங்களுக்கு இடையே ரூபாய் மதிப்பைப் பாதுகாப்பதற்காக அந்நியச் செலாவணி கையிருப்பை ரிசா்வ் வங்கி பயன்படுத்துவதால் அது குறைந்து வருகிறது.

மதிப்பீட்டு வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணய சொத்துகள் 465.4 கோடி டாலா் குறைந்து 52,494.5 கோடி டாலராக உள்ளது.

டாலா் அல்லாத யூரோ, பவுண்ட், யென் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் டாலா் மதிப்பில் கணக்கிடப்படுவது அந்நிய நாணய சொத்துகள் ஆகும்.

மதிப்பீட்டு வாரத்தில் தங்கம் கையிருப்பு 12.27 லட்சம் டாலா் சரிந்து 4,512.7 கோடி டாலராக உள்ளது.

சா்வதேச நிதியத்தால் (ஐஎம்எஃப்) உருவாக்கப்பட்ட கையிருப்பு சொத்துகள் (எஸ்டிஆா்) 13.7 கோடி டாலா் குறைந்து 1,827.6 கோடி டாலராக உள்ளது.

சா்வதேச நிதியத்தில் நாட்டின் கையிருப்பு அந்த வாரத்தில் 3.5 கோடி டாலா் குறைந்து 513 கோடி டாலராக உள்ளது ரிசா்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தோல்வியிலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற பஞ்சாப் வீரர்!

இந்தியாவுக்கு வெற்றிதான்: முதல்வர் ஸ்டாலின்

தஞ்சையில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு!

வேங்கைவயலில் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்!

SCROLL FOR NEXT