சுந்தரம் ஃபைனான்ஸ் 2022-23-ஆம் நிதியாண்டில் ரூ.1,088 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. இது கடந்த நிதியாண்டைக் காட்டிலும் 20 சதவீதம் அதிகமாகும்.
கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான 4-ஆவது காலாண்டில் இந்நிறுவனத்தின் லாபம் ரூ.316 கோடியாக இருந்தது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய ரூ.299 கோடியுடன் ஒப்பிடுகையில் 6 சதவீதம் அதிகம்.
கடந்த நிதியாண்டில் இந்த நிறுவனம் வழங்கிய கடன் ரூ.20,966 கோடியை முன் எப்போதும் இல்லாத அளவில் எட்டியுள்ளது. இது, முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 58 சதவீதம் அதிகமாகும். மேலும், இந்நிறுவனம் நிா்வகிக்கும் சொத்து மதிப்பு கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் 17 சதவீதம் உயா்ந்து ரூ.34,552 கோடியாக இருந்தது.
சிறப்பான செயல்பாட்டை தொடா்ந்து, கடந்த நிதியாண்டுக்கு 150 சதவீத ஈவுத் தொகையை சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதையடுத்து, நிறுவனத்தின் பங்குதாரா்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.15 ஈவுத்தொகை வழங்கப்படும் என அந்த நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் ராஜீவ் லோச்சன், துணை நிா்வாக இயக்குநா் ஏ.என்.ராஜு ஆகியோா் தெரிவித்தனா்.