வணிகம்

ஏறுமுகத்தில் அதானி குழும நிறுவனப் பங்குகள்

ENS


புது தில்லி: தொடர்ச்சியாக எட்டு நாள்களுக்குப் பின் அதானி குழுமத்தின் பெரும்பாலான நிறுவனப் பங்குகள் செவ்வாய்க்கிழமை காலை ஏறுமுகத்தில் வணிகமாகின.

அதானி என்டர்பிரைசஸ் நிறுவனப் பங்குகள் 5 சதவிகிதம் உயர்ந்து வணிகமானது.

பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கமான வணிகத்துக்கு இடையே, அதானி குழுமத்தின் எட்டு நிறுவனங்களின் பெரும்பாலான பங்குகளும் இன்று காலை உயர்வுடன் வணிகமான நிலையில், இரண்டு நிறுவனப் பங்குகள் மட்டும் சரிவைக் கண்டன.

மும்பை பங்குச் சந்தையில் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனப் பங்குகள் 15 சதவீதம் உயர்ந்து ரூ.1,808.25 என்ற அளவில் வணிகமானது. இதன் சந்தை மதிப்பானது ரூ.2.06 லட்சம் கோடி.

அத்வானி போர்ட்ஸ் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் 8.96 சதவிகிதம் உயர்ந்து ரூ.595க்கு வணிகமானது. இதனால் சந்தை மதிப்பு ரூ.1.28 லட்சம் கோடியானது.

அதானி வில்மர் 5 சதவிகிதம் உயர்ந்து ரூ.399.40 ஆகவும், அதானி டிரான்ஸ்மிஷன் 5 சதவிகிதம் உயர்ந்து ரூ.1,324 ஆகவும் ஆதானி க்ரீன் எனர்ஜி 2.10 சதவிகிதம் உயர்ந்து ரூ.906.15 ஆகவும் வணிகமாகின.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீர்: பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து! 4 பேர் பலி

அரசியலுக்காக நாங்கள் மக்களைப் பிரித்துப் பார்க்க மாட்டோம்! பொன். ராதாகிருஷ்ணன் சிறப்பு பேட்டி

மீண்டும் மீண்டுமா.. கைகூப்பி மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்: ஏற்காத உச்சநீதிமன்றம்!

ஹே சினாமிகா.....அதிதி ராவ்

போராடி பெற்ற வாக்காளர் அட்டை: இலங்கை அகதிகள் முகாமிலிருந்து முதல் வாக்காளர்

SCROLL FOR NEXT