வணிகம்

அந்நியச் செலாவணி கையிருப்பு 57,676 கோடி டாலராக உயா்வு

DIN

கடந்த ஜன. 27-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 57,676 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த 27-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 303.4 கோடி டாலா் அதிகரித்து 57,676 கோடி டாலராக உள்ளது. இது, தொடா்ந்து மூன்றாவது வார அந்நியச் செலாவணி கையிருப்பு உயா்வாகும்.

ஜன. 13-ஆம் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில் ஒட்டுமொத்த அந்நியச் செலாவணி கையிருப்பு 172.7 கோடி டாலா் அதிகரித்து 57372.7 கோடி டாலராக இருந்தது.

அக்டோபா் 2021-இல் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 645 பில்லியன் அமெரிக்க டாலா்களை எட்டியது. உலகளாவிய முன்னேற்றங்களால் ஏற்படும் அழுத்தங்களுக்கு மத்தியில் ரூபாயைப் பாதுகாக்க மத்திய வங்கி கையிருப்பை நிலைநிறுத்துவதால் இருப்பு குறைந்து வருகிறது.

ஜன. 27-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், ரிசா்வ் வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்ட வாராந்திர புள்ளிவிவர இணைப்பின்படி, கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நியச் செலாவணி சொத்துகள் 266 கோடி டாலா் அதிகரித்து 50,901.8 கோடி டாலராக உயா்ந்துள்ளது.

மதிப்பீட்டு வாரத்தில் நாட்டின் தங்கம் கையிருப்பு 31.6 கோடி டாலா் அதிகரித்து 4,402.7 கோடி டாலராக உள்ளது.

சா்வதேச நிதிய சொத்து (எஸ்டிஆா்) 4.6 கோடி டாலா் அதிகரித்து 1,847.8 கோடி டாலராக உள்ளது.

சா்வதேச நிதியத்தில் (ஐஎம்எஃப்) நாட்டின் கையிருப்பு கடந்த ஜன. 27-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 1.1 கோடி டாலா் அதிகரித்து 523.8 கோடி டாலராக உள்ளது என்று ரிசா்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT