இந்திய பங்குச்சந்தை வணிகம் புதன்கிழமை இன்று (நவ.30) ஏற்றத்துடன் நிறைவடைந்தது. முதல்முறையாக சென்செக்ஸ் 63 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து புதிய உச்சத்தை அடைந்தது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 417.81 புள்ளிகள் உயர்ந்து 63,099.65 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 0.67 சதவிகிதம் உயர்வாகும்.
இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 140.30 புள்ளிகள் சரிந்து 18,758.35 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 0.75 சதவிகிதம் உயர்வாகும்.
சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தர பங்குகளில் 21 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன. 9 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.
அதிகபட்சமாக எம் & எம் நிறுவனத்தின் பங்குகள் 4 சதவிகிதமும், அல்ட்ராடெக் சிமெண்ட் 2.16 சதவிகிதமும், பவர் கிரிட் 2.14 சதவிகிதமும், எச்யுஎல் 1.78 சதவிகிதமும், பார்தி ஏர்டெல் 1.55 சதவிகிதமும் உயர்வுடன் காணப்பட்டன.