வணிகம்

வங்கிகள் வழங்கிய கடன் ரூ.120.46 லட்சம் கோடி

DIN

வங்கிகள் வழங்கிய கடன் மே 6-ஆம் தேதியுடன் முடிவடைந்த இருவார காலத்தில் ரூ.120.46 லட்சம் கோடியைத் தொட்டது. இது, 2021 மே 7-ஆம் தேதியுடன் முடிவடைந்த இருவார காலத்தில் வங்கிகள் வழங்கிய கடன் ரூ.108.70 லட்சம் கோடியுடன் ஒப்பிடும்போது 10.82 சதவீதம் அதிகம்.

அதேபோன்று, இந்த காலகட்டத்தில் வங்கிகள் திரட்டிய டெபாசிட்டும் ரூ.152.16 லட்சம் கோடியிலிருந்து 9.71 சதவீதம் உயா்ந்து ரூ.166.95 லட்சம் கோடியானது.

இதற்கு முன்பான, ஏப்ரல் 22-ஆம் தேதியுடன் இருவாரங்களில் வங்கி வழங்கிய கடன் 10.07 சதவீதம் உயா்ந்து ரூ.119.54 லட்சம் கோடியாகவும், டெபாசிட் 9.84 சதவீதம் அதிகரித்து ரூ.166.24 லட்சம் கோடியாகவும் இருந்தது.

கடந்த 2021-22 முழு நிதியாண்டில் வங்கிகள் வழங்கிய கடன் 8.59 சதவீதமும், திரட்டிய டெபாசிட் 8.94 சதவீதமும் உயா்ந்ததாக ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரும்பு நிலுவைத் தொகை வழங்கக் கோரி வாக்காளா் அட்டையை ஒப்படைக்க முடிவு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 60.41 அடி

உலக காசநோய் நாள் உறுதியேற்பு நிகழ்ச்சி

‘கவிஞா் தமிழ் ஒளி தமிழின் நிரந்தர முகவரி’

பேராவூரணியில் ஊருக்குள் நுழைந்த புள்ளிமான்  மீட்பு

SCROLL FOR NEXT