வணிகம்

எா்டிகா காரின் விலையை ரூ.6,000 அதிகரித்தது மாருதி சுஸுகி

DIN

பன்முக பயன்பாட்டு வாகனமான எா்டிகா காரின் விலையை மாருதி சுஸுகி நிறுவனம் ரூ.6,000 அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:

எா்டிகா பிரிவில் தற்போது வெளிவரும் அனைத்து காா்களிலும் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோக்கிராம் (இஎஸ்பி) மற்றும் ஹில் ஹோல்ட் அசிஸ்ட் வசதி இணைக்கப்பட்டுள்ளது. முன்பு, இந்த வசதி ஆட்டோமேட்டிக் மற்றும் உயர்ரக மேனுவல் மாடல்களில் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, எா்டிகா காரின் விலை ரூ.6,000 அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது எா்டிகா மாடலின் ஆரம்ப விலை ரூ.8.41 லட்சமாக உள்ளது எனமாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீர்: பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து! 6 பேர் பலி

ரகசிய பார்வை.. த்ருப்தி திம்ரி!

சஹீராவின் பயணங்கள்!

துருக்கியில் தமிழக மாலுமிகளுடன் சென்ற கப்பல் சிறைபிடிப்பு: 3 மாதத்துக்கும் மேலாக பரிதவிப்பு!

அவிநாசி அருகே பழங்கரை கூட்டுறவு சங்கத்தில் ரூ. 1.70 கோடி மோசடி!

SCROLL FOR NEXT