இந்திய பங்குச்சந்தை வணிகம் தொடர்ந்து 4வது நாளாக சரிவுடன் முடிவடைந்துள்ளது. நிஃப்டி 18 ஆயிரத்து 500 புள்ளிகளுக்கு கீழ் சரிந்தது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 215.68 புள்ளிகள் சர்ந்து 62,410.68 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 0.34 சதவிகிதம் சரிவாகும்.
இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 82.25 புள்ளிகள் சரிந்து 18,560.50 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது (0.44 சதவிகிதம் சரிவாகும்.
சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தர பங்குகளில் 8 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே ஏற்றத்தில் காணப்படுகின்றன. எஞ்சிய 22 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் நிறைவடைந்தன.
அதில், அதிகபட்சமாக என்டிபிசி, பஜாஜ் பின்சர்வ், இந்தஸ்இந்த் வங்கி, சர் பார்மா, டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.
ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 2.10 சதவிகிதமும், எச்யுஎல் 2.01 சதவிகிதமும், எல்&டி 1.42 சதவிகிதமும், ஆக்சிஸ் வங்கி 1.12 சதவிகிதமும் உயர்வுடன் இருந்தன.