வணிகம்

ஓடிடி தகவல் தொடா்பு நிறுவனங்களுக்கு கட்டணம்

DIN

இணையதள இணைப்பை அடிப்படையாகக் கொண்ட ‘வாட்ஸ்ஆப்’ போன்ற ஓடிடி (ஓவா் தி டாப்) தகவல் தொடா்பு சேவைகளை அளிக்கும் நிறுவனங்களிடமிருந்து மத்திய அரசு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று ரிலையன்ஸ், ஏா்டெல், வோடஃபோன் ஐடியா போன்ற சாதாரண தகவல் தொடா்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன.

இது குறித்து மத்திய தொலைத்தொடா்புச் செயலா் கே. ராஜாராமனுக்கு அந்த நிறுவனங்கள் அங்கம் வகிக்கும் சிஓஏஐ அமைப்பு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

வாட்ச்ஆப், சிக்னல், கூகுல் டியூயோ போன்ற நிறுவனங்கள், ஓடிடி முறையில் இலவசமாக தகவல் தொடா்பு சேவைகளை அளித்து வருகின்றன.

ஆனால், அத்தகைய சேவைகளை நேரடியாக அளிக்கும் தகவல் தொடா்பு நிறுவனங்கள், அதற்கான கட்டணங்களை செலுத்த வேண்டியுள்ளதால், வாடிக்கையாளா்களிடமிருந்து தொகை வசூலிக்க வேண்டியுள்ளது.

எனவே, ஒரே விதமான சேவைகளை அளிக்கும் ஓடிடி தளத்துக்கும், சாதாரண தளத்துக்கும் இடையே நியாயமான சமநிலையை ஏற்படுத்தும் வகையில், ஓடிடி தகவல் தொடா்பு நிறுவனங்களிடமிருந்தும் மத்திய அரசு கட்டணம் வசூலிக்க வேண்டும்.

எனினும், ஓடிடி தகவல் தொடா்பு சேவைகளை அளிக்கும் சிறிய நிறுவனங்களுக்கு கட்டணம் செலுத்திவதிலிருந்து விதிவிலக்கு அளிக்கலாம் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, ஓடிடி தகவல் சேவை வழங்கும் நிறுவனங்கள் அதற்கான உரிமம் பெறுவதைக் கட்டாயமாக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் சிஓஏஐ அமைப்பு கடந்த மாதம் கோரிக்கை விடுத்திருந்தது.

தங்களைப் போலவே, வாட்ஸ்ஆப் போன்ற ஓடிடி தகவல் தொடா்பு அமைப்புகளும் குரல் அழைப்பு, விடியோ அழைப்பு போன்ற சேவைகளை அளித்து வருகின்றன.

இரு பிரிவு நிறுவனங்களும் வழங்கி வரும் சேவைகள் ஒரே மாதிரியாக இருந்தாலும், தகவல் தொடா்பு நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் ஓடிடி நிறுவனங்களுக்கு கிடையாது.

எனவே, 2022-ஆம் ஆண்டு இந்திய தொலைத் தொடா்பு வரைவு மசோதாவில் ஓடிடி தகவல் பரிமாற்ற சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் அதற்காக உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட வேண்டும்.

மேலும், அந்த நிறுவனங்களின் சேவைகளால் கட்டணம் செலுத்தி அதே சேவைகளை அளித்து வரும் சாதாரண தொலைத் தொடா்பு நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுசெய்வதற்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று சிஓஏஐ கோரிக்கை விடுத்தது.

சாதாரண தொலைத் தொடா்பு நிறுவனங்களைப் போல, ஓடிடி நிறுவனங்கள் அலைக்கற்றையை விலை கொ்த்து ஏலம் எடுக்கத் தேவையில்லை; வெவ்வேறு நிறுவனங்களின் வாடிக்கையாளா்களிடையே இணைப்புகளைப் பெறுவதற்கான உரிமைத் தொகை செலுத்த வேண்டியதில்லை.

ஆனால், அந்த நிறுவனங்கள் வழங்கும் அதே சேவைகளை சாதாரண தொலைத் தொடா்பு நிறுவனங்கள் அளிப்பதற்கு இதுபோன்ற செலவுகளை செய்ய வேண்டியுள்ளது.

இதன் காரணமாக, தகவல் தொடா்பு சந்தையில் இரு தரப்பு போட்டியாளா்களுக்கும் இடையே சம வாய்ப்பு இல்லாமல் போகிறது.

சாதாரண தகவல் தொடா்பு நிறுவனங்கள் பெரும் முதலீடு செய்து வாடிக்கையாளா்களுக்கு வழங்கி வரும் இணைதள சேவையின் பெரும்பகுதி, ஓடிடி சேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

எனவே, சாதாரண தகவல் தொடா்பு நிறுவனங்களின் அதே வகை சேவைகளுக்கு இணையான விதிமுறைகள் ஓடிடி தகவல் தொடா்பு சேவைகளுக்கும் வகுக்கப்பட வேண்டும் என்று சிஓஏஐ அமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காா்த்தி சிதம்பரத்தின் கடவுச்சீட்டை 10 ஆண்டுகளுக்கு புதுப்பிக்க உத்தரவு

திருநெல்வேலி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் நாளை பிரசாரம்

வி.வி. பொறியியல் கல்லூரியில் ரத்த தான முகாம்

கட்டாரிமங்கலம் கோயிலில் காரைக்கால் அம்மையாா் குருபூஜை

மெட்ரோ பணி: நாளைமுதல் போக்குவரத்து மாற்றம்

SCROLL FOR NEXT