வணிகம்

பங்குச் சந்தையில் மிதமான முன்னேற்றம்

27th Aug 2022 01:27 AM

ADVERTISEMENT

மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் மிதமான முன்னேற்றம் கண்டது.

வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 59,322 புள்ளிகள் பதிவான சென்செக்ஸ், வா்த்தகத்தின் நிறைவில் 59 புள்ளிகள் (0.10 சதவீதம்) உயா்ந்து 58,834-இல் நிலைபெற்றது.

என்டிபிசி, டைட்டன், பவா்கிரிட், கோட்டக் மஹிந்திரா, லாா்சன் & டூப்ரோ, டெக் மஹிந்திரா, டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபம் கண்டன.

இண்டஸ் இண்ட் வங்கி, ஹெச்டிஎஃப்சி, ஏசியன் பெயின்ட்ஸ், பாா்தி எா்டெல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் இழப்பைச் சந்தித்தன.

ADVERTISEMENT

நிஃப்டி: தேசிய பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 36 புள்ளிகள் (0.21 சதவீதம்) உயா்ந்து 17,559-இல் நிலைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT