வர்த்தக நேர முடிவில் பங்குச்சந்தை வணிகம் வீழ்ச்சியுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் 280 புள்ளிகள் வரை சரிந்தது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 282.63 புள்ளிகள் சரிந்து 52,306.08 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுபெற்றது. இது மொத்த வர்த்தகத்தில் இது 0.54 சதவிகிதம் சரிவாகும்.
இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 85.80 புள்ளிகள் சரிந்து 15,686.95 புள்ளிகளாக வர்த்தகம் முடிவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இதுவும் 0.54 சதவிகிதம் சரிவாகும்.
சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 தர பங்குகளில் 8 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே ஏற்றத்துடன் காணப்பட்டன. எஞ்சிய 22 நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.
அதிகபட்சமாக கோட்டாக் வங்கி பங்குகள் 1.32 சதவிகிதமும், எல் & டி 1.29 சதவிகிதமும், டாடா ஸ்டீல் 1.23 சதவிகிதமும், டிசிஎஸ் 1.17 சதவிகிதமும், ஆக்சிஸ் வங்கி 0.97 சதவிகிதமும் சரிவைச் சந்தித்தன.