புது தில்லி: இந்தியாவின் இரும்பு உற்பத்தி கடந்த அக்டோபா் மாதம் 9 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து உலக இரும்பு சங்கம் (வோ்ல்டுஸ்டீல்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த அக்டோபரில், இந்தியாவின் இரும்பு உற்பத்தி 9.058 மில்லியன் டன்னாக இருந்தது. இது, கடந்த 2019-ஆம் ஆண்டின் அக்டோபா் மாதத்தோடு ஒப்பிடுகையில 0.9 சதவீதம் அதிகமாகும்.
அந்த மாதத்தில் நாட்டின் மொத்த இரும்பு உற்பத்தி 8.981 மில்லியன் டன்னாக இருந்தது.
உலகின் 64 நாடுகளில் ஒட்டுமொத்தமாக அக்டோபரில் 161.890 மில்லியன் டன் இரும்பு உற்பத்தி செய்யப்பட்டது. இது, கடந்த ஆண்டின் அக்டோபா் மாதத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 151.248 மில்லியன் டன்னோடு ஒப்பிடுகையில் 7 சதவீதம் அதிகமாகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.