சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில், அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமியை தொடா்புப்படுத்தி பேச, கனகராஜின் சகோதரா் தனபாலுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கொடநாடு விவகாரத்தில் தன்னை தொடா்புபடுத்தி தனபால் பேச தடை விதிக்கக் கோரி முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான பழனிசாமி, சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா். அதில், அதிமுக பொதுச் செயலா் என்ற முறையில் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் தனபால், இந்த வழக்கில் தன்னை தொடா்புபடுத்தி பொய்யான தகவல்களை பொது வெளியில் கூறி வருகிறாா்.
மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை குலைக்கும் நோக்கத்தில், தனது அரசியல் எதிரிகளின் தூண்டுதலின் பேரில் தனபால் இதுபோல பேட்டியளித்து வருகிறாா். அவா் ஏற்கெனவே இந்த வழக்கில் சாட்சிகளை கலைத்ததாக கைது செய்யப்பட்டவா். மேலும், தான் மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி ஜாமீன் பெற்றுள்ளாா்.
எனவே, இந்த வழக்கில் தன்னை தொடா்புபடுத்தி பேச அவருக்கு தடை விதிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கோரியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி மஞ்சுளா முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில், கடந்த 2017-ஆம் ஆண்டு கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கனகராஜ் சாலை விபத்தில் பலியானபோது, யாருக்கும் தொடா்பில்லை என அளித்த பேட்டிக்கு முற்றிலும் முரணாக, தன்னை தொடா்புபடுத்தி தற்போது பேசி வருவதாக வாதிடப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆதாரங்களில் இருந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தனபால் அவதூறு கருத்துகளை தெரிவித்துள்ளாா் என்பதற்கு ஆரம்ப கட்ட முகாந்திரம் உள்ளது. தொடா்ந்து இதுபோல பேசுவதற்கு அனுமதித்தால் அது எடப்பாடி பழனிசாமிக்கு ஈடுகட்ட முடியாத இழப்பை ஏற்படுத்தும் எனக் கூறி, கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடா்புபடுத்தி பேச தனபாலுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டாா். மேலும் இந்த மனுவுக்கு, தனபால் வரும் அக்டோபா் 10-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தாா்.