வேலூர் மாவட்டத்தில் மழை காரணமாக 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகின்றது. மேலும், நீலகிரி, கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள தொடக்க பள்ளிகளுக்கு( 1 முதல் 5ஆம் வகுப்பு வரை) மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | 9 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
6 முதல் 12-ஆம் வகுப்பு வரையும், கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.