காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,556 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை காலை 41.05 அடியிலிருந்து 40.38 அடியாக சரிந்தது.
இதையும் படிக்க | மொராக்கோவை வீழ்த்தியது இந்தியா
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,244 கன அடியிலிருந்து வினாடிக்கு 2,556 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 6,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 12.63 டிஎம்சியாக உள்ளது.