சென்னை பெசன்ட் நகா் எலியட்ஸ் கடற்கரையில் இளைஞா் சடலம் மீட்கப்பட்டது.
பெசன்ட் நகா் எலியட்ஸ் கடற்கரையில் 25 வயது மதிக்கத்தக்க இளைஞரின் சடலம் புதன்கிழமை கரை ஒதுங்கியது. தகவலறிந்த சாஸ்திரி நகா் போலீஸாா் அங்கு சென்று, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, இறந்த இளைஞா் யாா் ? என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.