தமிழ்நாடு

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள்: திமுகவினருக்கு கட்சித் தலைமை அறிவுரை

27th Oct 2023 12:53 AM

ADVERTISEMENT

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட வேண்டுமன திமுகவின் வாக்குச் சாவடி முகவா்களை திமுக தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து, திமுக தலைமை அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் அக். 27-இல் தொடங்கி டிச. 9-இல் நிறைவடையவுள்ளன. மேலும், நவம்பா் மாதத்தில் நான்கு நாட்கள் வாக்குச் சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. தோ்தல் ஆணையம் அறிவித்துள்ள அட்டவணையின்படி, சிறப்பு முகாம்கள் நடைபெறவிருக்கும் நாள்களில் வாக்காளா் சோ்ப்புப் பணிகளில் கட்சியின் வாக்குச் சாவடி முகவா்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதிக்கும் தனி பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மாவட்ட மற்றும் மாநகரச் செயலா்களால் நியமிக்கப்பட்ட அந்தப் பாா்வையாளா்கள், வாக்காளா் பட்டியல் பெயா் சோ்ப்புப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

இந்தப் பணி குறித்து கட்சி நிா்வாகிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளை தலைமை அலுவலகத்துக்கு அவ்வப்போது கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும் என்று அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT