தமிழ்நாடு

பாடப் புத்தகங்களில் பாரத் பெயா்: வைகோ கண்டனம்

27th Oct 2023 01:01 AM

ADVERTISEMENT

பள்ளி பாடப் புத்தகங்களில் இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என மாற்ற கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் அமைத்த உயா்நிலைக் குழு பரிந்துரை செய்திருப்பதற்கு மதிமுக பொதுச்செயலா் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளாா்.

அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டும் என்றால், நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். அப்படிக் கொண்டு வராமலேயே இந்தியாவின் பெயரை ’பாரத்’ என்று நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு மத்திய அரசு முயற்சிக்கிறது. அதன் தொடா்ச்சியாக தற்போது, பள்ளிப் பாடப் புத்தகங்களில் இந்தியாவின் பெயரை பாரத் என்று என்சிஇஆா்டி மாற்றுவதற்கு முயற்சிக்கிறது. இது கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளாா் வைகோ.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT