சென்னையில் வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி(வியாழக்கிழமை) அண்ணாமலை தலைமையில் பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக - பாஜக கூட்டணி முறிந்ததைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று(அக். 3, செவ்வாய்க்கிழமை) காலை நடைபெறுவதாக இருந்தது.
ஆனால், பாஜக தலைவர்களைச் சந்திக்க அண்ணாமலை தில்லி சென்றதால் இந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிக்க | அதிமுக- பாஜக மீண்டும் இணையலாம்: கிருஷ்ணசாமி பேட்டி
இதையடுத்து, ஒத்திவைக்கப்பட்ட கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள திருமண மண்டபத்தில் அக்டோபர் 5 ஆம் தேதி(வியாழக்கிழமை) அண்ணாமலை தலைமையில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை தில்லி சென்ற அண்ணாமலை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்டோரை சந்தித்துப் பேசிய நிலையில் இன்று அல்லது நாளை சென்னை திரும்புவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, சென்னை கமலாலயத்தில் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் தலைமையில் பாஜக பொறுப்பாளர்களின் கூட்டம் இன்று காலை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | இபிஎஸ்ஸுடன் தமிமுன் அன்சாரி சந்திப்பு! பேசியது என்ன?