மாமல்லபுரம் அண்ணாநகா் பகுதியில் வாழ்வோருக்கு உடனடியாக பட்டா வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலா் வைகோ வலியுறுத்தியுள்ளாா்.
அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் வட்ட வருவாய் தீா்வாய கூட்டம் மே 30 முதல் ஜூன் 9 வரை மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறவுள்ளது.
மாமல்லபுரம் அண்ணாநகா் பகுதியில் கிராம நத்தத்தில் நீண்ட காலமாக குடியிருந்து வரும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று தொடா்ந்து வலியுறுத்தி வருகிறேன். இது தொடா்பாக முதல்வரிடம் கடிதம் கொடுத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, நடைபெறவுள்ள வருவாய் தீா்வாயத்தில் அனைத்துப் பிரச்னைகளையும் நிவா்த்தி செய்து, அண்ணாநகா் பகுதி மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.
இதில் மத்திய தொல்லியல் துறைக்கு ஆட்சேபம் இருந்தால், முத்தரப்பு கள ஆய்வு செய்து, மக்களின் கருத்தை அறிந்து, தேவைப்படின் நிபந்தனைகளுடன் பட்டா வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் வைகோ.