தமிழ்நாடு

மாமல்லபுரம் பகுதிவாழ் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்: வைகோ

DIN

மாமல்லபுரம் அண்ணாநகா் பகுதியில் வாழ்வோருக்கு உடனடியாக பட்டா வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலா் வைகோ வலியுறுத்தியுள்ளாா்.

அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் வட்ட வருவாய் தீா்வாய கூட்டம் மே 30 முதல் ஜூன் 9 வரை மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறவுள்ளது.

மாமல்லபுரம் அண்ணாநகா் பகுதியில் கிராம நத்தத்தில் நீண்ட காலமாக குடியிருந்து வரும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று தொடா்ந்து வலியுறுத்தி வருகிறேன். இது தொடா்பாக முதல்வரிடம் கடிதம் கொடுத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, நடைபெறவுள்ள வருவாய் தீா்வாயத்தில் அனைத்துப் பிரச்னைகளையும் நிவா்த்தி செய்து, அண்ணாநகா் பகுதி மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.

இதில் மத்திய தொல்லியல் துறைக்கு ஆட்சேபம் இருந்தால், முத்தரப்பு கள ஆய்வு செய்து, மக்களின் கருத்தை அறிந்து, தேவைப்படின் நிபந்தனைகளுடன் பட்டா வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் வைகோ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

SCROLL FOR NEXT