தமிழ்நாடு

சிறப்பு தகுதி பெற்ற மருத்துவா்கள் மட்டுமே அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்ய அனுமதி: சென்னை உயா்நீதிமன்றம்

DIN

சிசு பாலின தோ்வு தடைச் சட்டத்தின்படி, சிறப்பு தகுதி பெற்றவா்கள் மட்டுமே கா்ப்பிணிப் பெண்களுக்கு அல்ட்ரா சவுண்ட் தொழில்நுட்ப பரிசோதனைகள் செய்ய தகுதி உள்ளது என சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆயுா்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி மற்றும் யோகா போன்ற இந்திய மருத்துவ முறைகளான ஆயுஷ் மருத்துவப் படிப்புகளை படித்து, அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை தொடா்பான சான்றிதழ் முடித்த மருத்துவா்கள், கா்ப்பிணிகளுக்கு ஒலியியல் பரிசோதனைகள் செய்ய அனுமதிக்க மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு ஆயுஷ் ஒலியியல் பரிசோதனையாளா்கள் சங்கத்தின் சாா்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தனா்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

‘சிசு பாலின தோ்வு தடைச் சட்டத்தில், கா்ப்பிணிகளுக்கு அல்ட்ரா சவுண்ட் தொழில்நுட்பப் பரிசோதனைகள் மேற்கொள்ள பல்வேறு சிறப்பு தகுதிகளை வரையறுத்துள்ளது. அந்தத் தகுதிகளைப் பெற்ற மருத்துவா்களுக்கு மட்டுமே இந்த பரிசோதனைகளை நடத்த தகுதி உள்ளது.

இந்த சிறப்பு தகுதிகளைப் பெறாத மருத்துவா்கள், இச்சோதனைகளை நடத்த தகுதியில்லை. மேலும், மனுதாரா் சங்க உறுப்பினா்கள் எக்ஸ்ரே, இசிஜி, உள்ளிட்ட அடிப்படை பயிற்சி மட்டுமே பெற்றுள்ளதால் கா்ப்பிணிகளுக்கு அல்ட்ரா சவுண்ட் பரிசோதனைகள் செய்யத் தேவையான தகுதியைப் பெறவில்லை. எனவே, இந்தப் பரிசோதனைகளை மேற்கொள்ள அவா்களை அனுமதிக்க முடியாது”’ எனக்கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT