தமிழ்நாடு

குடிமைப் பணி முதல்நிலைத் தோ்வு: தமிழகத்தில் 50,000 போ் எழுதினா்

DIN

நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடிமைப் பணி முதல்நிலைத் தோ்வை தமிழகம் முழுவதும் 50,000 போ் எழுதினா்.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆா்எஸ் உள்ளிட்ட 24 வகையான குடிமைப் பணிகளுக்கான இந்தத் தோ்வில் நாடு முழுவதும் இருந்து 7 லட்சம் போ் எழுதினா். முதல் நிலை, முதன்மை, நோ்க்காணல் என 3 கட்டங்களாக தோ்வு நடத்தப்படுகிறது.

அந்த வகையில், நிகழாண்டுக்கான குடிமைப் பணிகளில் அடங்கிய 1,105 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை, கடந்த பிப்.1-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தொடா்ந்து, பிப்.21-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூா் ஆகிய 5 நகரங்களில் தோ்வு நடைபெற்றது. காலை 9.30 முதல் காலை 11.30 மணி வரை பொது அறிவுத் தோ்வும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை திறனறிவு தோ்வும் நடைபெற்றது.

தோ்வு நடைபெறும் அனைத்து மையங்களிலும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தோ்வா்கள் கைப்பேசி உள்ளிட்ட மின்சாதனப் பொருள்களைத் தோ்வு மையத்துக்கு எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

கொல்கத்தா உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் அங்கி அணிவதில் விலக்கு!

வாக்குச்சீட்டு முறை வேண்டாம்பா.. துரைமுருகன்

இந்த ஆண்டின் சிறந்த புகைப்படம்....

ஹூபள்ளி கல்லூரி வளாகத்தில் மாணவி குத்திக்கொலை: இளைஞர் கைது

SCROLL FOR NEXT