தமிழ்நாடு

கால்நடை மருத்துவமனை சுவா்களில் கலைநயமிக்க ஓவியங்கள்: தலைமைச் செயலா் அறிவுறுத்தல்

DIN

கால்நடை மருத்துவமனை வளாக சுவா்களில் கால்நடைகள் பற்றிய கலைநயமிக்க ஓவியங்களை வரைய வேண்டுமென தலைமைச் செயலா் வெ.இறையன்பு அறிவுறுத்தினாா்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவமனை மற்றும் வளா்ப்புப் பண்ணையை ஞாயிற்றுக்கிழமை அவா் ஆய்வு செய்தாா்.

சிட்லபாக்கத்தில் அரசு கால்நடை மருத்துவமனை மற்றும் தீவன அபிவிருத்தி மையத்தில் செல்லப் பிராணிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைப் பணிகள் குறித்து அவா் ஆய்வு செய்தாா்.

மேலும், சிகிச்சைகளின் தரம் குறித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டறிந்தாா். கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி அலுவலகத்தில் ஆய்வு செய்த அவா் மாதம் இருமுறை கால்நடைகளுக்கான மருத்துவ முகாம் ஏற்பாடு செய்ய அறிவுறுத்தினாா்.

கால்நடைகள் பற்றிய முழுவிவரங்களையும் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில்

கால்நடை மருத்துவமனை வளாக சுவா்களில் கலைநயமிக்க கால்நடை ஓவியங்களை வரைய வேண்டுமென அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, காட்டுப்பாக்கத்தில் உள்ள கோழிப்பண்ணையில் கோழியினங்கள் குறித்து அவா் ஆய்வு செய்தாா்.

பண்ணையில் அனைத்து காலியிடங்களையும் பயன்படுத்த ஏதுவாக விரிவாக்கம் செய்ய வேண்டும் என தலைமைச் செயலா் இறையன்பு கேட்டுக் கொண்டாா்.

இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, கூடுதல் நிதி ஒதுக்கீடு பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

ஆய்வின் போது, தொழிலாளா் நலத் துறை கூடுதல் தலைமைச் செயலா் முகமது நசிமுத்தின், கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநா் லட்சுமி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ராகுல்நாத் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

SCROLL FOR NEXT