தமிழ்நாடு

போக்குவரத்துத் துறை வருவாய் திமுக ஆட்சியில் அதிகரிப்பு: அமைச்சர்

DIN

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் வருவாய் அதிகரித்துள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். 

போக்குவரத்து கழக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு குளிரூட்டப்பட்ட ஓய்வறையை திறப்பு விழா இன்று நடைபெற்றது. 

இதில் பேசிய அமைச்சர் சிவசங்கர், கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் அரசு போக்குவரத்துக்கழகம் சீரழிந்து காணப்பட்டது.

கேரளத்தில் போக்குவரத்துக்கழக தொழிலாளருக்கு மாதத்தில் 15 நாட்கள் மட்டுமே பணி வழங்கப்படுகிறது. அண்டை மாநிலங்களில் பகுதி நேர வேலை மட்டுமே கொடுக்கப்படுகிறது. 

அதிமுக ஆட்சியில் ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு பணப்பலன்கள் எதுவும் வழங்கப்படவில்லை. ஆனால், அரசு போக்குவரத்து கழகத்தில் தற்போது பயணிப்போர்களின் எண்ணிக்கையும், வருவாயும் உயர்ந்திருக்கிறது.

இதனால், போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் பிரச்னை குறைந்து வருகிறது எனக் குறிப்பிட்டார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் பிரபல வணிக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

காதல் தொழில் பழகு..!

மதங்களுக்கு மரியாதை கொடுப்பவர் மோடி: ராஜ்நாத் சிங்

இது அதிதி ஆட்டம்!

திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் எல்லை ஊடுருவல்! : அமித்ஷா | செய்திகள்: சிலவரிகளில் | 23.04.2024

SCROLL FOR NEXT