தமிழ்நாடு

தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

DIN

தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழை எதிரொலியாக, தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால், அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட உள்ளதால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம்  மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர், திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

கிருஷ்ணகிரி அணை நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. அணையின் மொத்த கொள்ளளவு 52 அடியாகும் (1666.26 மில்லியன் கனஅடி). 

மே 29-ஆம் தேதி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 48.25 அடியாக அதாவது 1262.11 மில்லியன் கனஅடி உள்ளது. தற்போது அணைக்கு விநாடிக்கு 456 கன அடியாக உள்ளது.

தற்போது அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில், அணையின் பாதுகாப்பு கருதி மேற்கொண்டு வரும் உபரிநீர் முழுவதும் அணையில் இருந்து எந்நேரமும் வெளியேற்றப்பட வாய்ப்பு உள்ளது. 

எனவே, தென்பெண்ணை ஆற்றங்கரையோரம்  மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அங்கித் திவாரியிடம் பறிமுதல் செய்யப்பட்ட காரை ஒப்படைக்கக் கோரிய மனு தள்ளுபடி

வில்பட்டி ஊராட்சியில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பழனி கிரி வீதியில் இயங்கும் ஒரே பேருந்து: பக்தா்கள் அவதி

தில்லி முதல்வரை தகுதிநீக்கம் செய்ய கோரி மனு தில்லி நீதிமன்றம் தள்ளுபடி

தோ்தல் நடத்தை விதி மீறல்: டி.டி.வி.தினகரன் மீது வழக்கு

SCROLL FOR NEXT