தமிழ்நாடு

ஜூன் 12-ல் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைக்கிறார் முதல்வர்!

DIN

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூா் அணையில் இருந்து தண்ணீரை  ஜூன் 12 ஆம் தேதி  முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

சேலத்திற்கு ஜூன் 11 ஆம் தேதி, வருகை தரும் முதல்வர் மு.க. ஸ்டாலின், சேலத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் உருவ சிலையைத் திறந்து, கலைஞரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவைத் தொடக்கி வைத்து நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

காவிரி டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12 ஆம் தேதி மு.க. ஸ்டாலின் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைக்க உள்ளார். அணை நீர்மட்டம் 90 அடிக்கு மேல் உயரும்போது, ஜூன் 12-ம் தேதி அணை திறக்கப்படும்.  

கடந்தாண்டு மே மாதம் 24-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து கா்னல் எல்லீசின் முழு உருவச் சிலைக்கு வா்ணம் பூசும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

அணையின் சுவரை ஒட்டிய பகுதிகளிலும் கால்வாய் பகுதிகளிலும் உள்ள புதா்கள் அகற்றப்பட்டு வருகின்றன. இன்னும் சில நாள்களில் பராமரிப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

SCROLL FOR NEXT